Translate

Saturday, August 9, 2014

PRAY FOR ACTIVE SWM RAINFALL

090814 16LT Mascarene High
090814 20LT CMA imagery
cloud height 090814 1117Z
INSAT PIX090814 




From these imagery one can infer that SWM may become moderately active over Kerala coast, Karnataka coast and Tamilnadu.

[090814] Today night (or tomorrow early morning)  there may be possibilities that rain may be rain south of Tambaram Cheyyur and Permbalur district and  along 10 Deg Parallel .

Let the rain God be blessing to TN and Kerala and Karnataka

why the entire NATION.
PRAY FOR THAT.

Director -actor Parthiban

பார்த்திபனார் [பார்த்திபன் ஆர் ]அவர்களே , வரும்படி சொன்னவருக்கே "வரும்படி" கொடுப்பவரே , நெறைய எதிர் பார்க்கிறோம் உங்களிடம்.

Sunday, July 20, 2014

Festivals

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட மிகக்குறைந்த  தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஜனவரியில்  மூன்றாம்  நாள்  ஏற்படும்.  எனவே உலகெங்கும் ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடபடுகிறது. "அயனம்" என்பது பாதை / பயணம்  ஆகும். சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் [உத்தர அயனம்] ஜூன் 21 இல் 23.5 வடக்கு அட்சரேகையில்[கடக ரேகை]  முடிந்து அதன் தெற்கு நோக்கிய பயணம் அடுத்த நாள் ஆரம்பமாகி விடும்.  அதே போல் டிசம்பர் 21 இல் 23.5 தெற்கு அட்சரேகையில் [மகர ரேகை]சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் [தட்சண அயனம்] முடிந்து அதன் வடக்கு  நோக்கிய பயணம் அடுத்த நாள் ஆரம்பமாகி விடும்.. மகர ரேகையில் இருந்து மீண்டு  சூரியன் மேலே வரும் போது பூமிக்கு அருகில் சூரியன் வந்து விடுவதால் சூரியனுக்கு வணக்கம் செலுத்தினர் தமிழர். அதுவே கதிரவ வழிபாடு என்னும் தை முதல் நாள்.

Saturday, July 19, 2014

வேட்டியும் அவை தீர்மானமும்

எனக்கு என்னவோ யாரோ ஒருவருடைய பழிவாங்கும் எண்ணமாக படுகிறது. நீதித்துறையை மட்டம் தட்ட வேண்டும் என்று யாரோ ஒருவர் விரும்பி இருக்ககூடும். அது நிகழ்த்த பட்டு இருக்கிறது. அவ்வளவே.
என்றாலும் கூட, சீண்டவேண்டும் என்று முயலும் போது சினந்து வெளிப்பட்டது தமிழரின் தன்மானம். எனவே வேட்டி என்பது அடையாளம். அதை தினமும் உடுத்துகின்றேன் அல்லது உடுத்தவில்லை என்பது கேள்வியல்ல.  கண்ணகியை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ? தமிழை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ?

தமிழ் நாட்டில் ரயில் வசதிகள் பற்றிய ஒரு பார்வை (தமிழக முதல்வர் அம்மாவின் பார்வைக்காக)


[1] திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு வண்டி (அ) விருதுநகர், மானாமதுரை , காரைக்குடி, புதுகோட்டை வழியாக, [மதுரை செல்லாமல்] சென்னைக்கு.  இதனால் திருநெல்வேலி பயணியர் மிகுந்த பலன் பெறுவர்.

[2]  போடி -மதுரை அகல ரயில் பாதை விரைந்து முடிக்கப்படல் வேண்டும்.

[3] செங்கல்பட்டு ஒரு முனையமாக அறிவிக்கப்படல் வேண்டும்.

Wednesday, June 25, 2014

[உண்டி= உணவு] 'அம்மா உணவகம்"

ஐயா, உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் ஆவர். , மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் [தொழிற்சாலைகளில்] பணி புரியும் அரசு ஊழியர்கள் சலுகை விலையில் காலை / மதியம் உணவும் காப்பி போன்ற பானங்களும் பெறுகின்றனர். மாதம் 1.5 லட்சம் அளவிற்கு சம்பளம் பெறுவோரும் மற்றோரும் பயன் பெறுகின்றனர்.
 [இட்லி =ரூபாய் நான்கு / பொங்கல் =ரூபாய் 10/- , மதிய உணவு ரூபாய் 20/- காபி ரூபாய் 5/-]
            [ இது கூடாது என்று சொல்ல வரவில்லை]
ஆனால் பொதுமக்கள் இந்த சலுகைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக தமிழக அரசு அளித்ததே 'அம்மா உணவகம்'  அரசு ஊழியரை போல் பொது மக்களும் பயன் பெறும் நோக்கில் வந்ததே 'அம்மா உணவகம்"

இதை பின்பற்றி நிச்சயமாக ஏற்புடை கட்டணத்தில் கல்வி கூடங்களும் / மருந்தகங்களும் வரும்.

Tuesday, June 24, 2014

SWM 2014 RAINFALL

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒழுங்காக பெய்யாது வறட்சியை உண்டுபண்ணிவிடுமோ என்ற பயம் இந்திய வேளாண் குடிகளிடைய ஏற்பட்டு உள்ளது.  அகில இந்திய அளவில் மழையானது -38 % [24.06.2014 :: செவ்வாய் : கணக்குப்படி] குறைவாய் பெய்து உள்ளது.  பல காரணங்கள் சொலப்படுகின்றன :
[1] சூன் 21 தேதி சூரியன் 23.5 வடக்கு அட்ச ரேகையில் -கடக ரேகையில்- இருந்தபோது இந்தியாவின் வடமேற்கு பகுதியை விட பெரும்பான்மை கீழைப் பகுதி இயல்பைவிட மிகுதியாக வெப்பமாயிற்று. 
வடமேற்கு இந்திய பகுதியில் வெப்பம் குறைவதற்கு  மேற்கிலிருந்து பயணித்த வானிலை தொந்தரவுகள் ஒரு காரணம் ஆகும்.
[2] தென் மேற்கு பருவகாற்றுக்கு அடிகோலும் மூலமான - "மோரிஷிஎஸ் ஹை " எனப்படும்  பெருங்காற்று உயர் மண்டலம் வழக்கமான இடத்தில வலுப்பெற்று [தெற்கு இந்திய பெருங்கடலில்] அமையவில்லை. 
[3] எல் நினோ எனப்படும் வானிலை சாபம் இன்னும் முழுமையாக உருபெறவில்லை. எனவே அதன் தாக்கம் என்றும்  சொல்லமுடியாது.
[4] கடனீர் வெப்பநிலை மாறுபாடும் பெரிய அளவில் இல்லை.
[5] சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் / [அயனம் ] ஆரம்பமாகிவிட்டது. தென் மேற்கு பருவமழையின் அடிநாதமாய் விளங்கும்  "மோரிஷிஎஸ் ஹை" நிச்சயம் வலுப்பெறும்.
[6] அப்போது சூலைத்திங்களில் நன்மழை கிட்டும்.