Translate

Sunday, August 24, 2014

மரபணு மாற்றம்

ஆகாய தாமரை, சீமை கருவேல மரம் போன்றவை மக்களுக்கு பயன் அளிப்பதை விட ஊறு விளைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மரபணு மாற்றம் பற்றி ஆய்வு செய்பவர்கள் - ஆகாயத்தாமரை, சீமை கருவேல மரங்களில் - மரபணு மாற்றம் பற்றி ஆய்வு செய்து அத்தாவரங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றம் செய்து தர வேண்டும். இந்தியாவில் மரபணு மாற்ற ஆய்வுகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும் ஆய்வகங்களில் ஆய்வு செய்ய தடை இல்லை என்பதை அறிகின்றேன்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் அல்லது மற்ற உயர் கல்விக்கூடங்கள் இம்முயற்சிதனை மேற்கொள்ள முன்வரவேண்டும். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

No comments: