INSTEAD of corporate employees taking agriculture in hand, the Corporate Giants must consider consolidating agriculture land and taking agriculture as industry. They must consider this as their Corporate Social Responsibility {CSR} at this time of crisis and indulge in agricultural activity by adopting local farmers and modern techniques. They must excel other counter parts in the world.
Translate
Sunday, April 23, 2017
Monday, November 7, 2016
Saturday, July 2, 2016
யானைகளை அப்புறப்படுத்தும் வழி
யானைகளுக்கும் வலசை போதல் உண்டு. இந்த வலசை போகும் பாதை, மாதம், நேரம்
பற்றிய அறிவு தேவை. ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை போகும். இது அப்போதைய
வானிலையை பொருத்து முன் / பின் மாறுபடும். யானைகளுக்கு இது காடு அல்லது
இது நாடு என்று எல்லாம் தெரியாது. மனிதர் இடை படும் போது இடர் ஏற்படுகிறது.
இது மனிதன் - விலங்கு சண்டை ஆகிவிடுகிறது. வனத்துறை "அறிவியல் முறையில்"
யானைகளை அப்புறப்படுத்தும் வழிகளை அறிந்து இருக்கவில்லை. எப்படி தற்காத்து
கொள்வது ? [1] மிகவும் பொடியாக்கப்பட்ட மிளகாய் வற்றல் தூளை யானை பாதைகளில்
தூவியும் அது உண்வாய் கொள்ளும் உணவு பொருள்கள் மீது தூவியும் விட்டால்
அதனை உண்ட யானைகள் நெடி காரணமாயும் காரம் காரணமாயும் மீண்டும் வராது. [2]
தீயில் மிளகாய் பொடியை தூவி நெடி ஏற்றினாலும் வராது 3] சக்தி வாய்ந்த
லேசர் ஒளி கற்றைகள் மூலம் யானையின் முகத்தில் படும்படி ஒளி நடனம்
நடத்தினால் யானை மிரளும். [4] ஊருக்குள் போகாமல் தடுக்க இரும்பு ஆணி
படுக்கைகளை விரித்தால் யானை மட்டும் அல்ல மிருகங்கள் எளிதில் வராது. [5]
மலை மாவட்ட மக்கள் தற்காத்து கொள்ள இந்த தகவலை அதிகம் பகருங்கள்.
Saturday, January 2, 2016
NEM RF and flood
தமிழகத்தின்
வட கிழக்கு பருவக்காற்று கால
மழை கடந்த 2015 அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக
பொழிந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் அதிக மழை பெரும்
என்பதும் வரலாறு அறிந்த உண்மை.
அதனால் தான் அம்மாவட்டதிற்கு
"ஏரிகள் மாவட்டம் " என்ற பெயரும் உண்டு. கடந்த 2015 வ
கி மழையில் செங்கல்பட்டு நகர்
தான் அதிக அளவாக 226 செ.மீ மழை பெற்றது.
எனினும் செங்கல்பட்டிலோ அல்லது அம்மாவட்டத்தின் பிற
பகுதிகளிலோ (ஆலந்தூர், தாம்பரம் , திருப்பெரும்புதூர் வட்டம் தவிர
) பெரிதான வெள்ளப்பாதிப்பு இல்லை. இதற்கு
முழுக்காரணம் "பாலாறு" ஆகும். ஏரிகளில் தேங்கிய
மிகை நீர் பாலாற்றில் வடிந்தது.
"பாலாறு" அகன்ற
பெரிய ஆறு. அடையாரைப்போல் குறுகிய
அகலமும், குறைந்த தொலைவும் ஓடக்கூடிய
ஆற்றில் "வெள்ளப்பெருக்கு" என்பது
ஒரு பொதுவான நிகழ்வு.
[இதனை பொறுப்பு
துறந்த நிலையில் செயல் பட்ட அதிகாரிகளின்
போக்கோடு ஒப்பிடக்கூடாது.இயற்கை தவிர்த்து அதிகாரிகளின்
பொறுப்பு துறந்த நிலையுமே பேரிழப்பிற்கு
காரணம்]
அடையாறு
ஆதனூர் அருகே வடக்காக திரும்பி செல்லும் இடத்தில்,
அடையாற்றை திசை திருப்பி ஊரப்பாக்கம்,
காட்டாங்குளத்தூர் கூடுவான்சேரி , சிங்கப்பெருமாள்கோவில் , பரனூர் வழியாக "பாலாற்றில்"
இணைத்து விட
வேண்டும். இந்த நதி நீர்
இணைப்பு செய்தால் நிச்சயமாக அடையாறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது
கட்டுப்படுத்தப்படும்.
Saturday, June 20, 2015
Wednesday, December 31, 2014
Subscribe to:
Posts (Atom)