Translate

Saturday, July 2, 2016

யானைகளை அப்புறப்படுத்தும் வழி

யானைகளுக்கும் வலசை போதல் உண்டு. இந்த  வலசை போகும் பாதை, மாதம், நேரம் பற்றிய அறிவு தேவை. ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை போகும். இது அப்போதைய வானிலையை பொருத்து முன் / பின் மாறுபடும். யானைகளுக்கு இது காடு அல்லது  இது நாடு என்று எல்லாம் தெரியாது. மனிதர் இடை படும் போது இடர் ஏற்படுகிறது. இது மனிதன் - விலங்கு சண்டை ஆகிவிடுகிறது. வனத்துறை "அறிவியல் முறையில்" யானைகளை அப்புறப்படுத்தும் வழிகளை அறிந்து இருக்கவில்லை. எப்படி தற்காத்து கொள்வது ? [1] மிகவும் பொடியாக்கப்பட்ட மிளகாய் வற்றல் தூளை யானை பாதைகளில் தூவியும் அது உண்வாய் கொள்ளும் உணவு பொருள்கள் மீது தூவியும் விட்டால் அதனை உண்ட யானைகள் நெடி காரணமாயும் காரம் காரணமாயும் மீண்டும் வராது. [2] தீயில் மிளகாய் பொடியை தூவி நெடி ஏற்றினாலும் வராது 3] சக்தி வாய்ந்த லேசர்  ஒளி கற்றைகள் மூலம் யானையின் முகத்தில் படும்படி ஒளி நடனம் நடத்தினால் யானை மிரளும். [4] ஊருக்குள் போகாமல் தடுக்க இரும்பு ஆணி படுக்கைகளை விரித்தால் யானை மட்டும் அல்ல மிருகங்கள் எளிதில் வராது. [5] மலை மாவட்ட மக்கள் தற்காத்து கொள்ள இந்த தகவலை அதிகம் பகருங்கள்.

No comments: